சந்திப்பு : ஜி.செல்வா
அரசுப் பள்ளிகள் தேசத்தின் அடிப்படை சொத்து, பொதுக் கல்வியை வலுப்படுத்த அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் ஞாயிறன்று திருப்பூர் மாவட்டத்துக்கு வருகை தந்த இந்திய மாணவர் சங்கத்தின் சைக்கிள் பிரச்சாரக் குழுவினருக்கு மலர் தூவியும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 5000க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. தமிழக பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் செயல்படுத்த பள்ளிக்கல்வி துறை அனுமதி அளித்துள்ளது.